குன்னூர் கோர விபத்து! - வெளியான முக்கிய தகவல்

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில், சுற்றுலா தொடர்பான விளம்பர நோட்டீஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து சுற்றுலா அழைத்து செல்லப்பட்டுள்ளது. கேரளாவில் பகவதி அம்மன் கோயில், கொச்சி கடற்கரை, குருவாயூர் பகுதிகளுக்கும், தமிழகத்தில் மேட்டுப்பாளையம், உதகை, மருதமலை, மாசாணியம்மன் கோயில், திருப்பங்குன்றத்திற்கும் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. நபர் ஒருவருக்கு தங்குமிடம் தவிர்த்து ஆயிரத்து 600 ரூபாய் கட்டணமும், சிறுவர்களுக்கு 800 ரூபாய் கட்டணமும் பெறப்பட்டது. இந்நிலையில், உதகையில் இருந்து புறப்பட்டு, மருதமலை செல்லும் வழியில் விபத்து நடந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்