நடுரோட்டில் பற்றி எறிந்த கண்டெய்னர் லாரி - கருகி போன பல லட்சம்.. - சென்னை அருகே பரபரப்பு

x

காஞ்சிபுரம், ஒரக்கடத்தில் உள்ள பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து விலை உயர்ந்த பைக்குகளை ஏற்றிக் கொண்டு நள்ளிரவில் கண்டெய்னர் லாரி புறப்பட்டது... காரணித்தாங்கல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, லாரியின் பின்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார். இவ்விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 58 பைக்குகள் எரிந்து சேதமானது. இருசக்கர வாகனத்தின் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இத்தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்