பாலத்தில் பதைபதைக்கும் சம்பவம்...பாதி கவிழ்ந்த கண்டெய்னர் லாரி - வெளியான திக் திக் காட்சிகள்

x

தூத்துக்குடியில் இருந்து இருந்து பேப்பர் பண்டல்களை ஏற்றி கொண்டு புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கண்டெய்னர் லாரியின் முன்புறம் மேம்பாலத்திற்கு தொங்கிய நிலைக்கு சென்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஓட்டுநர் உயிர்த்தப்பினார். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் நகாய் ஊழியர்கள், 3 மணி நேர போராட்டத்திற்கு கிரேன் உதவியுடன் கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினர். இதனிடையே, விபத்தைப் பார்த்து உதவச் சென்ற பேருந்து பயணியின் லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்