6 மாவட்டங்களில் `Confirm'..வானிலை ஆய்வு மையம் தகவல்

x

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஹமூன் புயல், அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழை எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்