"மூதாட்டியை ஆபாசமாக திட்டிய நடத்துனர்"-"தட்டி கேட்க வந்த கணவருக்கு நேர்ந்த கதி

x

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே, மாட்டுக்கான தீவனப்புல்லுடன் பேருந்தில் ஏறிய மூதாட்டியிடம், தீவனப்புல்லுக்கு டிக்கெட் கேட்டு பேருந்து நடத்துநர் ஆபாசமாக பேசியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

தேவக்கோட்டையை சேர்ந்த காளியம்மாள் என்ற மூதாட்டி, மாட்டுக்கான தீவனப்புல்லுடன் தேவக்கோட்டை அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, மூதாட்டியிடம் தீவனப்புல்லுக்கு டிக்கெட் கேட்டு பேருந்து நடத்துநர் தகராறு செய்ததாகவும், தொடர்ந்து ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தேவக்கோட்டை அரசு பேருந்து நிலையத்தில் இறங்கி, தனது கணவரை மூதாட்டி அழைத்து வந்த நிலையில், பேருந்து நிலையத்தில் வைத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வயதான தம்பதி இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முதியவர் பையில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம் மாயமானதாக கூறப்படும் நிலையில், தம்பதி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்