கால்வாய்க்குள் கான்கிரீட் - "நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்"-தலையில் அடித்துக்கொள்ளும் பொதுமக்கள்

x

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட நந்தவெளி ரோடு மற்றும் வண்டிப்பாளையம் இணைப்புச்சாலை பகுதிகளில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் மின் கம்பங்களை கால்வாய்க்குள் வைத்து கான்கிரீட் போடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஒப்பந்ததாரர்களிடம் மக்கள் கேட்டபோதும், அதை பொருட்படுத்தாமல் பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மழைக்காலங்களில் குப்பைகள் அடைத்துக் கொண்டால் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்