நடிகர் பிரபு தேவா தம்பி மீது பரபரப்பு புகார்

x

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட விக்னேஷ், கடந்த 2021ம் ஆண்டு, நடிகர் பிரபுதேவாவின் தம்பியும், நடன இயக்குநருமான நகேந்திர பிரசாத் வீடு காலியாக இருப்பதை அறிந்து அவரை நாடியுள்ளார். அப்போது, தனது வீட்டை தனியார் நிறுவனம் ஒன்று கேர் டேக்கராக கொடுத்துள்ளதாகவும், அவர்களிடம் லீசுக்கான 25 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்குமாறும், விக்னேஷிடம் நாகேந்திர பிரசாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்த தனியார் நிறுவனம் திடீரென ஏமாற்றி விட்டு தலைமறைவானதாக தெரிகிறது. இதனிடையே, வீட்டை காலி செய்ய சொல்லி நாகேந்திர பிரசாத் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கவே, லீசுக்கென செலுத்தப்பட்ட 25 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் காலி செய்து விடுவதாக விக்னேஷ் கூறியுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குடியிருந்த வீட்டின் கேட்டை மூடி வெல்டிங் செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, வெல்டிங் செய்யப்பட்ட கேட்டை போலீசார் உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே நாகேந்திர பிரசாத் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்