பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு.. வெளியான முக்கிய அறிவிப்பு

x

அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 600 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. இதற்கு 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், திடீரென தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு காரணமாக தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் தேர்வு வாரியம், ஜனவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த போட்டித்தேர்வை பிப்ரவரி 4ஆம் தேதி நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை, பிப்ரவரியில் நடைபெறும் தேர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்