குறைதீர் கூட்டத்தில் போட்டி விருந்து - "நல்லா வயிறு நிறைய சாப்பிடுங்க.."

x

சிவகங்கையில் மாதம்தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தந்த விவசாயிகளுக்கு அதிமுக எம்.எல்.ஏ உணவு வழங்கி வந்த நிலையில், இந்த மாதம் போட்டிக்காக மானாமதுரை திமுக எம்.எல்.ஏ உணவு வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறைதீர் கூட்டம் முடிந்து சொந்த ஊர் திரும்ப மாலை 4 மணிக்கு மேல் ஆகும். இதனால் விவசாயிகள் மதிய உணவிற்கு சிரமப்பட்டனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த சிவகங்கை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ செந்தில்நாதன், இதனை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், விவசாயிகள் பசியோடு வீடு திரும்பாமல் இருக்க, கடந்த இரண்டு மாதங்களாக உணவு வழங்கி வந்தார். இதனை கேள்விப்பட்ட மானாமதுரை தொகுதி திமுக எம்.எல்.ஏ தமிழரசி இந்த இந்த மாதம் தனது செலவில், உணவு வழங்குவதாக கூறி,ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே ஏற்பாடு செய்து வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்