தலைகுப்புற கவிழ்ந்த கம்பெனி வேன் - 25 பெண் தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி - வீடு திரும்பும்போது சோகம்

x

தலைகுப்புற கவிழ்ந்த கம்பெனி வேன் - 25 பெண் தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி - வீடு திரும்பும்போது சோகம்

திருத்தணியில் தனியார் நிறுவனத்தின் வேன் கவிழ்ந்த விபத்தில் 25 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியில் தனியார் ஆயுத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பணி முடிந்து, நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

கீழாந்தூர் என்ற பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகீழ் கவிழ்ந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பின்னர், அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்