80 சவரன் நகையுடன் திருமணமான கல்லூரி மாணவி திடீர் மாயம் - 22 நாளில் புது மாப்பிள்ளைக்கு ஷாக்

x

சென்னையில், திருமணமான 22 நாளில் கல்லூரிக்கு செல்வதாக கூறி 80 பவுன் நகையுடன் மாயமான புதுமணப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடுத்த தாம்பரத்தை சேர்ந்த இளைஞருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் சென்னக்குப்பத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 11-ம் தேதி திருமணமாகியுள்ளது. கல்லூரியில் படித்து வந்த இளம்பெண், கட்டணம் செலுத்தாததால் கடிதம் எழுதி தர நிர்வாகனத்தினர் கேட்பதாக கூறி கடந்த 3-ம் தேதி கல்லூரிக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் இளம்பெண் வீடு திரும்பாததால், கல்லூரியில் சென்று விசாரித்த போது அவர் கல்லூரிக்கு வராதது தெரியவந்தது. மேலும் இளம்பெண்ணின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதும், திருமணத்தின் போது போடப்பட்ட 80 சவரன் நகை காணாமல் போனதும் தெரியவந்தது. விசாரணையில் திருமணத்திற்கு முன்பே இளைஞர் ஒருவரை இளம்பெண் காதலித்ததும், தற்போது இளைஞரும் தலைமறைவானதும் தெரியவந்தது. இதனையடுத்து காதலனுடன், புதுமணப்பெண் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்