கல்லூரி மாணவி தூக்கிட்டு த*கொலை.. கோவை அருகே சோகம்

x

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில், மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த கீர்த்தனா என்ற இளம் பெண், கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில், சம்பவத்தன்று வகுப்பிற்கு செல்லாமல் விடுதியிலே தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், இளைஞர் ஒருவரை மாணவி காதலித்து வந்ததாகவும், அந்த காதலை வீட்டார் ஏற்க மறுத்ததால் கீர்த்தனா மன உளைச்சலில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்