பள்ளியில் அதிரடியாக ஆய்வு..உணவை ருசித்து பார்த்த கலெக்டர்..கடைசியில் மாணவர்களுக்கு அவர் சொன்ன விஷயம்

x

பொள்ளாச்சி அருகே பள்ளி சமையலறையை ஆய்வு செய்த கலெக்டர் மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவை ருசித்து பார்த்தார். பொள்ளாச்சி அருகே உள்ள சிங்கையன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் மாணவிகளை கணக்கு வாய்ப்பாடு சொல்ல சொன்னார். மேலும், எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள் என மாணவர்களிடம் கேட்டு அறிவுரை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்