மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை... மரக்கன்றுகள் வழங்கி நெகிழ்ச்சி

x

மழை வேண்டி, கோவை கரும்புகடை பகுதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட, குளிர்ச்சியான நிலைமையை இறைவன் ஏற்படுத்தி தர வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது. மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்