கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு

x

கோவை உக்கடம் அருகே, கடந்த ஆண்டு கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 11 பேரை என்.ஐ.ஏ., கைது செய்துள்ளது. இதனிடையே, உக்கடத்தை சேர்ந்த முகமது இர்தியாஸ் என்பவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகமது இர்தியாஸை வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்