கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி - மருத்துவமனையில் திடீர் அனுமதி

x

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பாட்ஷா, கடும் மூச்சு திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாட்ஷாவுக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இடது பக்க கைகளில் கடும் வலியும் ஏற்பட்டு, உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனைக்கு, சிறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். அங்கு, சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் இடத்தில் வைத்து, பாட்சாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், கோவை அரசு மருத்துவமனையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்