ஐடி ஊழியரிடம் வெறியாட்டம் - சிசிடிவியில் சிக்கிய கட்சி பிரமுகர்கள்

x

மதுரையில் ஐடி ஊழியரை தாக்கி செயின் பறித்த திமுக, பாஜக பிரமுகர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை பரசுராம்பட்டியை சேர்ந்த ஹரிஹரன், மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை அழகர்கோயில் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஹரிஹரன் பெட்ரோல் நிரப்பிய போது, அங்கு வந்த 5 பேர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கச்செயினை பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் தாக்குதல் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தெற்குவாசல் பகுதியை சேர்ந்த திமுக வட்டசெயலாளர், சூர்யா நகரை சேர்ந்த பாஜக பிரமுகர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்