அதிரடி தடை போட்ட போலீசார்... ஒன்றுகூடும் வழக்கறிஞர்கள் சங்கம் .. பரபரக்கும் விவகாரம்

x

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பற்றிய குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சொந்த வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின் 198 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போக்குவரத்து போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் வழக்கறிஞர்கள் பற்றிய குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவு, குறைபாடான நம்பர் பிளேட் சம்பந்தமானது எனவும், அது ஸ்டிக்கர்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்