சென்னை to ஆந்திரா பறந்த கார் - விரட்டிப் பிடித்த அதிகாரிகள் - காருக்குள் காத்திருந்த ஷாக்

x

ஆந்திராவில் தங்கக்கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, சுமார் ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கார் மூலம் விஜயவாடாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், விஜயவாடா அருகே போலபள்ளி சுங்கச்சாவடியில் சுங்கத்துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான காரை மடக்கி சோதனை செய்தனர். இலங்கை, துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கத்தை, ஒருவர் சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 கிலோ 300 கிராம் தங்க கட்டிகள் மற்றும் தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர் வசிப்பிடத்தில் இருந்து 6 கிலோ 800 கிராம் தங்க கட்டிகள், ஒரு லட்சத்து 50 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்