நொடியில் நேர்ந்த பயங்கரம்; விளையாடிக்கொண்டிருந்த மாணவன் துடிதுடித்து பலி - கதறும் பெற்றோர்

x

சென்னையில், கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த 6ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தயாள் சுந்தரம் - கீதா மருத்துவ தம்பதியின் மகன், தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் தினமும் மாலை நேரத்தில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சி பெற்று வந்தார். வழக்கம்போல் சிறுவன் கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த மின்சார கம்பியை தொட்டதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்