நள்ளிரவில் அடித்த அபாய மணி.. சென்னை, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

x

சென்னையில் குடியிருப்பு பகுதியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அசோக் நகர் வாசுதேவபுரம் பகுதியில் இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக, நேற்று நள்ளிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் தனியார் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் புரளி என தெரியவந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்