சென்னை ECRல் கண்ணிமைக்கும் நேரத்தில் இளம்பெண் உயிரை பறித்த `தண்ணீர்'

x

சென்னை, அண்ணாநகரை சேர்ந்தவர் அனுசத்தியா. இவர் தன் தாயின் பிறந்தநாளை, குடும்பத்தினர் மற்றும் தோழிகளுடன் சேர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் பெரும் விமரிசையாக கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தின் போது, தோழிகளுடன் சேர்ந்து அனுசத்தியா மது அருந்தியதாக கூறப்படுகிறது. மதுபோதையிலே விடுதியின் நீச்சல் குளத்தில் அனுசத்தியா குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், ஒரு கட்டத்தில் குளத்தின் ஆழமான பகுதியில் சென்று நீச்சல் தெரியாமல் தத்தளித்ததாகவும் தெரிகிறது. இதில், நீச்சள் குளத்தில் மூழ்கிய அனுசத்தியா மற்றும் அவரது தோழி ஒருவரையும் மீட்ட விடுதி காவலர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அனுசத்தியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரது தோழிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்