காதலுக்கு எண்டுகார்ட் போட்ட காதலி... மொபைலில் வந்த அந்த மாதிரி போட்டோஸ் - அதிர்ந்த மாப்பிள்ளை.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

x

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த முகமது யூனுஸ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். இதனிடையே, பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முகமது யூனுஸ், காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி உள்ளார். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார், திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை கட்டாயபடுத்தி பல முறை முகமது யூனுஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மிரட்டி பணம் பறித்ததாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முகமது யூனுஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிமுக வட்டச் செயலாளர் பப்லு என்கிற ராமச்சந்தர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்