அடுத்த அதிர்ச்சி... கலாஷேத்ரா மாணவியிடம் பாலியல் அத்துமீறல் - அதிர வைத்த சிசிடிவி

x

திருவான்மியூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, கலாஷேத்திரா கல்லூரியில் மாணவி ஒருவர் பரதநாட்டியம் பயின்று வருகிறார். இவர் கல்லூரிக்கு நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் இருசக்கர வாகனப் பதிவு எண்ணை வைத்து, மந்தைவெளியை சேர்ந்த சீனிவாசன் என்ற ஜோஸ்வாவை போலீசார் கைது செய்தனர். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில், கடந்த 10 வருடங்களாக ஓட்டுநர் வேலை செய்து வந்த சீனிவாசன், கல்லூரிக்கு செல்லும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சீனிவாசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்