"மனுவை திருப்பி அனுப்பிய தீர்ப்பாயம்" சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

விபத்து தொடர்பாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை இழப்பீடு கோரிய மனுவாக ஏற்று, விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இது தொடர்பாக, ஒரகடத்தைச் சேர்ந்த மலரவன் என்பவர், தாக்கல் செய்த மனுவில், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில், தான் படுகாயமடைந்த நிலையில், இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்ததாகவும், ஆனால், ஆறு மாதங்கள் முடிந்து விட்டதாக கூறி, மனுவை தீர்ப்பாயம் திருப்பி அனுப்பியதாகவும் குறிப்பிட்டார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விபத்து குறித்து காவல்துறையினர் அனுப்பி வைக்கும் அறிக்கையை, இழப்பீடு கோரும் மனுவாக ஏற்று விசாரணையை தொடரலாம் என, தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்