சென்னையில் வெளிநாட்டு சரக்கு - கடையில் கொத்து கொத்தாக சிக்கிய மதுபானங்கள் - தட்டி தூக்கிய போலீஸ்

x

சென்னையில், வெளிநாட்டு மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 655 வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்தனர். சென்னை பர்மா பஜாரில், சில கடைகளில் சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அந்த கடைகளில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, நாகநாதன், கல்யாணராமன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்