கரிக்கட்டையாக கிடந்த உடல்... விசாரணைக்காக சென்ற ஓட்டுனரும் மரணம்... சென்னையை உலுக்கிய மரணங்கள் ...

x

சென்னை, எண்ணூரில்.. விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர் திடீரென உயிரிழந்த வழக்கில், நபரின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். வேன் ஓட்டுநரான இவர், கடந்த 14 ஆம் தேதி எண்ணூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில், பைக்கில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராஜேந்திரனை பிடித்த போலீசார், விசாரணைக்காக சாத்தாங்காடு காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்து நடந்தபோது, சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் ராஜேந்திரனை தாக்கியதாகவும், இதனால் தலையில் ஏற்பட்ட காயத்தில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை மறுத்த ராஜேந்திரனின் உறவினர்கள், ராஜேந்திரனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தபோது அவர் நல்ல உடல்நிலையுடன் இருந்ததாக கூறி வீடியோவையும் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்