சந்தேகத்தில் பிடித்த போலீஸ்.. வசமாக சிக்கிக்கொண்ட நபர்

x

சென்னை ஓட்டேரியில் போதை மாத்திரை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். தகவலின் பேரில் ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் சோதனை செய்தபோது 120 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 200 கிராம் மாவா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட நபர், அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் தாஸ் என தெரியவந்ததை அடுத்து, இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்