சென்னை பெண் வளர்த்த 120 நாய்கள்..கொந்தளித்த அக்கம் பக்கத்தினர்..நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு

x

சென்னை வேளச்சேரியில் ஒரே வீட்டில் வளர்க்கப்பட்ட 120 நாய்கள், மாநகராட்சி அதிகாரிகளால் மீட்டுச் செல்லப்பட்டன. ஆண்டாள் அவென்யூ தெருவில் வசித்து வருபவர் ஹேமலதா. இவர் தனது வீட்டில் 100-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்தார். இதில் நாய்கள் குரைக்கும் சத்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர், நாய்களை மீட்டுச் செல்லக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நாய்களை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்பேரில்,120 நாய்களை அதிகாரிகள் பிடித்துச் சென்றனர். இதில், அதிகாரிகளை நாய்கள் கடித்ததால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்