"நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும் உன்ன சொந்தம் ஆக்குமடா"சென்னை தினத்தின் சிறப்பு புகைப்பட கண்காட்சி

x

சென்னை தினத்தையொட்டி அடையாறில் அமைந்துள்ள சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. காலனி ஆதிக்கத்தின் போது இருந்த சென்னையின் வரலாறு, பண்பாடு, சமூக அமைப்பு, அரசு ஆவணங்கள் உள்ளிட்டவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வந்தது முதலான கடிதப் போக்குவரத்து, வியாபாரிகளின் கடிதங்கள், சென்னை ஜார்ஜ் கோட்டை குறித்தான ஆவணங்கள், 1800-களின் சென்னையின் மக்கள் தொகை பற்றிய குறிப்புகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்