சென்னையில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்... வெடித்து சிதறிய வீடு - அச்சத்தில் உறைந்த மக்கள்

x

சென்னை கொளத்தூரில் உள்ள வீட்டில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேதிப்பொருட்கள் வெடித்ததில், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆதித்யா பிரணவ் உடல்சிதறி உயிரிழந்தார். தொடர்ந்து நேற்றிரவு மீண்டும் அப்பகுதியில் இரண்டு முறை சிறியளவில் வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடமாநில நபர்களை வைத்து போலீசார், அப்பகுதியை சுத்தப்படுத்தி வந்தனர். இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் சத்தத்துடன் வெடித்ததால், வீட்டில் வேலை செய்த நபர்கள் அலறியடித்தபடி ஓடினர். இம்முறை சத்தம் அதிகமாக கேட்டதால் அருகிலிருந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். எனினும் வேதிப்பொருட்களை தொடர்ந்து போலீசார் அப்புறப்படுத்தி வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்