நள்ளிரவில் சென்னையை அதிரவிட்ட இளைஞர்கள்...வெளியான சிசிடிவி காட்சிகள்

x

சென்னை, அசோக் நகரில் உள்ள மருந்து கடையில், சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் மற்றும் சாக்லேட்டுகளை இரு இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி வெளியாகி பரவி வருகிறது. திருஞானம் என்பவர் நடத்தி வரும் மருந்து கடையில் நள்ளிரவில் இளைஞர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கடப்பாரையால் கடையின் ஷட்டரை உடைத்து புகுந்த இளைஞர்கள், கல்லாப்பெட்டியில் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் மற்றும் கடையில் இருந்த சாக்லேட்டுகளை திருடிச் சென்ற நிலையில், அவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்