செங்கல்பட்டில் ரயில் தடம்புரண்டு விபத்து | Chengalpattu | Chennai | Train | ThanthiTV

x

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயிலானது, செங்கல்பட்டு ரயில் நிலையத்தை கடந்து தாலுகா காவல்நிலைய ரயில்வே கேட் பகுதியில் சென்ற போது, 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி தடம் புரண்டன. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், அதனை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரயில் போக்குவரத்து குறைவான நேரத்தில், இந்த விபத்து நிகழ்ந்ததால், ரயில் சேவையில் பெரிதளவில் பாதிப்பில்லை


Next Story

மேலும் செய்திகள்