வேதியியல் டீச்சருக்கு-6... தலைமை ஆசிரியருக்கு-4... பாரபட்சம் பார்க்காமல் செய்த போலீஸ்

x

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி அவதூறாகப் பேசுவதாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பேரில், ஸ்டெல்லா ஜெயசெல்வியிடம், தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி விசாரணை நடத்தினார். அப்போது, அவரை ஸ்டெல்லா ஜெயசெல்வி தாக்கியதாக அளித்த புகாரின்பேரில், ஏர்வாடி போலீசார் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி அளித்த புகாரின்பேரில், தலைமையாசிரியை ரத்தின ஜெயந்தி மீது, 4 பிரிவுகளின் கீழ் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்