நாடுமுழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்.. மின்சார வாகனங்களுக்கு இந்தியன் ரயில்வே சூப்பர் பிளான்

x

நாடுமுழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்..

மின்சார வாகனங்களுக்கு இந்தியன் ரயில்வே சூப்பர் பிளான்

2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 46 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது.

ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மலிவு விலையில் EV சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதற்காக ரயில்வே அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களை கண்டறிந்து, அங்கு மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதிகளை நிறுவுவதற்காக ரயில்வே திட்டமிட்டுள்து.

இவ்வாறு அமைக்கப்படும் சார்ஜிங் பாயின்ட்களை பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்