குளக்கரையில் சிக்கிய செல்போன் சிக்னல்.. போன் பேச குவிந்த மக்கள்

x

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையால் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், புறையூர் குளத்தங்கரையில் மட்டும் சிக்னல் கிடைப்பதால், அங்கு சென்று பொதுமக்கள் செல்போனில் பேசி வருகின்றனர். தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பல கிராமங்களில் வசிப்பவர்கள், வெளியே இருக்கும் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், குரும்பூரை அடுத்த புறையூரில் இருக்கும் கடம்பா குளக்கரையில் மட்டும் லேசாக சிக்னல் கிடைப்பதால், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அந்த இடத்துக்குச் சென்று, தங்கள் உறவினர்களுடன் பேசி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்