போதையில் இளைஞர்கள் செய்த அதிர்ச்சி சம்பவம்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x

சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே, மதுபோதையில் இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தூர் எம்.எம்.டி.ஏ. மூன்றாவது தெருவில், மதுபோதையில் இருந்த 8க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவின் கண்ணாடிகளை உடைத்தும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்