"வருஷம் 1 லட்சம் கட்டி படிக்க வச்சோம்" சிபிஎஸ்இ அங்கீகாரம் பெறாத பள்ளி நிர்வாகம் ... குமுறும் பெற்றோர்கள்...

x

தஞ்சாவூர், மாதாக்கோட்டையில் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெறாமல், பொய் கூறி பள்ளியில் மாணவர்களை சேர்த்துள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர், மாதாக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கமலா சுப்பிரமணியம் பள்ளி முன்பு குவிந்த பெற்றோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பெற்றோர், சிபிஎஸ்இ அங்கீகாரம் உள்ளதாக பொய் கூறி, மாணவர்களை பள்ளியில் சேர்த்ததாக குற்றஞ்சாட்டினர். ஒன்றரை ஆண்டாக அங்கீகாரம் பெறாத பள்ளியில் படித்த மாணவர்கள் பொது தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை வாங்கிக் கொண்டு தங்களை ஏமாற்றி விட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்