"கொடநாடு கொலை வழக்கு" தனபாலை மீண்டும் விசாரிக்கும் சிபிசிஐடி

x

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், தனபால் என்பவரை மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி கிடைத்துள்ளது.

vovt

கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் என்பவர் லாரி மோதி உயிரிழந்தார். இதில் பலர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், கனகராஜின் தம்பியான தனபால் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் தனபாலை மீண்டும் விசாரிக்க அனுமதி கேட்டு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில், மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, அனுமதி ஏதும் தேவையில்லை, சிபிசிஐடியே சம்மன் அனுப்பி விசாரிக்கலாம் என அறிவுரை கூறியது. இந்நிலையில், இன்னும் சிலநாட்களில் தனபால் விசாரிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என சமீபத்தில் தனபால் கூறியிருந்தார். இந்நிலையில் இவர் மீண்டும் விசாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்