அம்பை பல் பிடுங்கிய விவகாரம் - ஆட்சியர் அலுவலகம் சென்ற தாய் - நெல்லையில் பரபரப்பு | Tirunelveli

x

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது கொடுத்த புகாரை திரும்ப பெறுமாறு போலீசார் மிரட்டுவதாக, மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் மனு அளித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை பற்களை பிடுங்கிய விவகாரத்தில், அப்போதைய ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக, விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த அருண், சந்தோஷ் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மற்றும் அம்பாசமுத்திரம் ஏ எஸ் பி பல்வீர்சிங் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்தோஷின் தாயார் ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த வாரம் தங்கள் பகுதியில் நடைபெற்ற சிறு மோதல் தொடர்பாக, தங்கள் மகன்கள் மீது விக்கிரமசிங்கபுரம் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற சொல்லி போலீசார் மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்