நேருக்கு நேர் மோதிய கார்கள் - நீதிபதி படுகாயம்

x

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், புதுக்கோட்டை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி படுகாயம் அடைந்தார்.

திருமயம் அருகே உள்ள சமத்துவபுரம் என்ற இடத்தில், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், புதுக்கோட்டை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமாரி ஜெமீரத்தினாவும், அவரது ஓட்டுநரும் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு காரில் வந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு பாதிப்பு எதுவும் இல்லை. அவரிடம் திருமயம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நெஞ்சுவலிப்பதாக கூறியதால் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்