பேருந்தை வழிமறித்து ஓட்டுநரின் காலை கடித்த கார் டிரைவர்

x

காருக்கு வழிவிடாத ஆத்திரத்தில், பேருந்து ஓட்டுநரை கடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையிலிருந்து, முதுகுளத்தூருக்கு சென்ற அரசு பேருந்தின் பின்னார், கார் ஒன்று தொடர்ந்து ஹாரன் அடித்தபடியே சென்றுள்ளது. பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் பேருந்தை வழிமறித்து, காரை நிறுத்திய இளைஞர், இறங்கிச் சென்று பேருந்து ஓட்டுநர் சந்திரசேகரை, இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. மேலும், அவரது காலையும் அந்த இளைஞர் கடித்து வைத்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார், இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவர் சிவகங்கை மாவட்டம் தே. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜோதிமணி என்பதும், தமது காருக்கு வழிவிடாத ஆத்திரத்தில் அவர் பேருந்து ஓட்டுநரை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, ஜோதிமணியை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்