கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்து - விசாரணை களத்தில் போலீசார்

x

சென்னை தியாகராய நகரில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தியாகராயநகர் ஜி.என் செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில், 3 வாகனங்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து ஏற்படுத்திய காரை மீட்ட போலீசார், ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்