எங்கேயும் வேலை கிடைக்கல... விரக்தியின் உச்சியில் பட்டதாரி - வீட்டின் நடுவே.. விபரீத முடிவு

x

"எங்கேயும் வேலை கிடைக்கல..".. விரக்தியின் உச்சியில் பட்டதாரி - வீட்டின் நடுவே.. விபரீத முடிவு

சென்னை நெசப்பாக்கம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞர் தூக்கு போட்டி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணப்பாக்கத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அஜித்குமார் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் யாரிடமும் பேசாமல், கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் விரக்தி அடைந்த பட்டதாரி இளைஞர், வீட்டில் தூக்கு போட்டி தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்