வீட்டிற்கு அழைத்து கொலை முயற்சி.. திமுக பிரமுகர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு
வீட்டிற்கு அழைத்து கொலை முயற்சி.. திமுக பிரமுகர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு
கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பான தகராறில், கம்பம் திமுக நகர செயலாளார் செல்வக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தயாளன்.
இவர் அதேபகுதியைச் சேர்ந்த கம்பம் திமுக நகர செயலாளார் செல்வக்குமார் என்பவரிடமிருந்து, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை விலைக்கு வாங்கியதாக தெரிகிறது.
இதனிடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தயாளனை வீட்டிற்கு அழைத்த செல்வகுமார் தரப்பினர், அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் காயமடைந்த தயாளனுக்கு, தேனி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தயாளன் அளித்த புகாரின் பேரில், செல்வக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.