"அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள்" - சென்னை ஐஐடி வெளியிட்ட ரிப்போர்ட்

x

"அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள்" - சென்னை ஐஐடி வெளியிட்ட ரிப்போர்ட்

#iit #chennai #privatehospitals #pregnancy

தமிழகத்தில், அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக, சென்னை ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை ஐஐடியின் மானுடவியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த ஆய்வு முனைவர்கள், கடந்த 2016 - 21 ஆண்டு வரையிலான பிரசவ சிகிச்சைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அதில், தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் மூன்று மடங்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவங்கள் நடைபெறுவது தெரியவந்தது. அதேநேரம், சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மடங்காக இது இருப்பதாகவும் தெரிய வந்தது. அதேபோல், இந்திய அளவில் 49.7 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெறுவதும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்