விறுவிறுப்பாக நடக்கும் ஜல்லிக்கட்டு...பயங்கரமாக பாயும் காளைகள் - தீரத்துடன் அடக்கிய காளையர்கள்

x

புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு 3 கிராமங்கள் சார்பில் நடைபெற்றுவரும் இந்த ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 800 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ள நிலையில், வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை தீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். வெற்றிபெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு பல்வேறு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்