இடிந்து விழுந்த உணவக சுவர்...இடிபாடுகளில் சிக்கி பறிபோன உயிர்

x

பெரியபாளையம் அருகே, உணவக சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அதன் உரிமையாளர் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் தும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் உணவகம் நடத்தி வந்தார். இந்நிலையில் உணவகத்தை புதுப்பிப்பதற்காக ட்ரில்லிங் இயந்திரத்தை கொண்டு சுவரை துளையிடும்போது, எதிர்பாராத விதமாக சுவர் கோபிநாத் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த கோபிநாத்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் வழியிலேயே உயிரிழந்ததாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்