சுடசுட ரெடியாகிறது தமிழ்நாட்டில் BSNL 4G... உறுதியான தகவல்

x

பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் 4ஜி தொடக்கம் செய்யப்படுவது குறித்து, மக்களுடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டம் ராமேஸ்வரத்தில், நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் தமிழ்மணி கலந்து கொண்டு, இனி வரும் காலத்தில் வரக்கூடிய திட்டங்கள் மற்றும் பயன்பாடு குறித்து விளக்கி பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிஎஸ்என்எல் நெட்வொர்க் புது பொலிவுடன் 249 இடங்களில் 4 ஜி நெட்வொர்க் கொடுக்கப்படும் என்றார். இந்த 4ஜி நெட்வொர்க்கானது 5ஜி நெட்வொர்க்கிற்கு சமமாக செயல்படும் என தெரிவித்தார். தற்போது பிஎஸ்என்எல் 3ஜி பயன்படுத்தி வரும் பயனாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று 4ஜி சிம்கார்டு வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்