ரெஜிஸ்டர் ஆபிஸ் உதவியாளரின் மண்டையை உடைத்த ஜோதி.. சென்னையில் பகீர்

x

வியாசர்பாடி, பி.வி காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். 58 வயதான இவர், பதிவு துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் நிலையில், சம்பவத்தன்று வியாசர்பாடி அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஜோதி என்பவர், பாலகிருஷ்ணனை மறித்து பணம் கேட்டு தகராறு செய்த நிலையில், தர மறுத்த அவரை பீர்பாட்டிலால் நடு மண்டையில் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரத்தம் சொட்ட மயங்கி கிடந்த பாலகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், போலீசில் தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில், தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், ஏற்கனவே 9 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடி ஜோதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்